மனதின் அடியில் காலங்கள் அழித்த கலையின் நீட்சியாகவே துவங்குகிறது நந்தலாலா...ஒரு 20 நாட்களுக்கு முன்புதான் மிஷ்கினை கிழித்திருந்தோம்..தொடர்ந்து அவர் பேசி வரும் பேச்சுக்களால் புண் பட்டு தவித்த எனக்கு..அவரே ஒத்தடமாக நந்தலாலாவை சமர்பித்திருக்கிறார்..என்னளவில் இந்த படத்தின் ஆழுமை தன்மை மூலம் ..தனது ஆங்காரமான கலையை வெளிப்படுத்தியதாகவே தோன்றுகிறது..தமிழ் படைப்பு வெளியில் வீடு க்கு பிறகு புதிய வெளியை கட்டமைத்ததர்க்காக கண்ணீரிலிருந்து வார்த்தைகளை கோர்க்க முற்படுகிறேன்,,ஆயினும் சின்ன மன வருத்தமும் இல்லாமல் இல்லை மூல கதைக்கோ கதாசிரியனுக்கோ ஒரு நன்றியை கூட இதுவரை தெரிவிக்காதது கவலையளிக்கும் விடயமாக இருக்கிறது..கிகிஜிரோ என பலர் சொல்லியும் ஏன் மறுப்பு தெரிவிக்க வில்லை மிஸ்கின்..அதோடு நந்தலாலாவை பார்த்த போது தோன்றிய பயன்படுத்தப்பட்ட இசைவடிவம் ஏன் கிகிஜோரோவிளிருந்து கையாளப்பட்டிருக்கிறது..இன்னும் பல கேள்விகள் மனதை குடைந்து கொண்டே போனாலும்..நந்தலாலா ஒரு தேர்ந்த படைப்பு..குறிப்பாக சாதியம்,பெண்ணியம் ,மனிதர்களிநூடாக பயணிக்கிற ஆழ்ந்த நேசம் என மயிலிறகை போல வருடிசெல்கிறது..நந்தலாலாவின் வாழ்விற்கான புள்ளிகள்..இடம்பெயரும் சக மனிதனின் இருள்சூழ்ந்த பக்கங்களை புரட்டியது கலைக்கு நீங்கள் ஆதார சுருதியை கொண்டு வர முயன்று கொண்டிருப்பதை காட்டுகிறது..நன்றியும்..வாழ்த்துக்களும்..
பின் குறிப்பு ..உங்களை இந்நேரம் பலர் துக்கி கொண்டாடியிருக்க வாய்ப்பிருக்கிறது..அதை புறக்கணியுங்கள்..மீண்டும் தரையிலிருந்தே உங்களுக்கான பேச்சையும் கலையையும் வார்த்தெடுங்கள் ..
0 கருத்துரைகள்:
Post a Comment